தமிழ் எழுதி
Alt+n அல்லது இதை(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).
Latest topics
» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறதுby tamilparks Fri Sep 25, 2015 4:58 pm
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:58 pm
» குதிரை பந்தயம் -Horse Race@Singapore _My_clicks-1
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:54 pm
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Thu May 08, 2014 12:56 pm
» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!
by sathikdm Mon Apr 28, 2014 7:21 pm
» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Mon Apr 21, 2014 12:34 pm
» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது?
by sathikdm Fri Apr 11, 2014 5:46 pm
» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி?
by sathikdm Wed Apr 09, 2014 6:12 pm
» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி?
by sathikdm Tue Apr 01, 2014 7:37 pm
» உலகின் அதிவேகமான 10 கார்கள்....!
by sathikdm Tue Apr 01, 2014 1:20 pm
» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....!
by sathikdm Mon Mar 31, 2014 3:15 pm
» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...!
by lakshmikannan Fri Mar 28, 2014 9:25 am
» லோகோ வடிவமைப்பது எப்படி?
by lakshmikannan Fri Mar 28, 2014 9:20 am
» அச்சலா-அறிமுகம்
by அச்சலா Sun Mar 16, 2014 12:31 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by அச்சலா Sun Mar 16, 2014 12:35 am
» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா?
by sathikdm Thu Mar 06, 2014 2:57 pm
» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி?
by sathikdm Tue Feb 18, 2014 2:13 pm
» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....!
by sathikdm Fri Feb 07, 2014 2:08 pm
» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!
by sathikdm Sun Feb 02, 2014 10:33 pm
» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி?
by sathikdm Wed Jan 29, 2014 1:41 pm
» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன?
by sathikdm Mon Jan 20, 2014 8:03 pm
» விளக்கவுரை
by velmurugan.sivalingham Sat Jan 18, 2014 10:44 pm
» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்
by sathikdm Sun Jan 05, 2014 5:41 pm
Social bookmarking
Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website
Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website
மாணவர்களே.. முதல் மதிப்பெண் பெறுவது எளிது.. வெற்றிச்சாவி!
2 posters
Page 1 of 1
மாணவர்களே.. முதல் மதிப்பெண் பெறுவது எளிது.. வெற்றிச்சாவி!
மண்ணில் பிறந்த நாம் மண்ணோடு போகப்பொகிறோம், அதற்க்குள், நமது நினைவை வலாற்றில் பதித்து விட்டுச் செல்லலாம், நல்லவற்றை பேசுவோம், நல்லவற்றை காண்போம், நல்லவற்றை சிந்திப்போம்
நல்ல கனவுகள் நூறு காண்போம் , அதில் ஆறாவது பலிக்காதா என்ன?!
உங்களின் கருத்துக்களை எனக்கு அனுப்புங்கள் உங்களின் எண்ணங்களை எழுதுங்கள் உலகத்தின் பார்வைக்காக
அன்புடன் தேன்தமிழ்
மாணவர்களே.. முதல் மதிப்பெண் பெறுவது எளிது..
வெற்றிச்சாவி!
நல்ல கனவுகள் நூறு காண்போம் , அதில் ஆறாவது பலிக்காதா என்ன?!
உங்களின் கருத்துக்களை எனக்கு அனுப்புங்கள் உங்களின் எண்ணங்களை எழுதுங்கள் உலகத்தின் பார்வைக்காக
அன்புடன் தேன்தமிழ்
மாணவர்களே.. முதல் மதிப்பெண் பெறுவது எளிது..
வெற்றிச்சாவி!
நூற்றுக்கு நூறு வாங்குவது முடிகிற காரியமா? ஒரே ஒரு கேள்விக்கு, பாதி பதிலை எழுதாமல் விட்டுவிட்டால்கூட போச்சே... தவிர, நான் ஒரு தடவைகூட 100/100 வாங்கினதில்லையே’ என்று யோசிக்காதீர்கள்.
நம்பிக்கை நிச்சயம் பலனளிக்கும்.
‘‘அப்படியானால் இதுவரை எனக்கு 100/100 கிடைக்காததற்கு காரணம் நம்பிக்கை இல்லாதது மட்டும்தானா?’’ என்கிறீர்களா?
ஒரு கதை... தன் குடிசைக்கு வெளியில், தெருவில் ஒரு பாட்டி எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.
அங்கே வந்த ஓர் இளைஞன் ‘‘என்ன தேடறீங்க?’’ என்றான்.
‘‘என் பெட்டிச் சாவியைத் தொலைச்சுட்டேன். அதான்...’’ ‘‘பாட்டி, சாவியை எங்கே போட்டீங்க? தெருவுக்கு இந்தப் பக்கமா, அந்தப் பக்கத்திலேயா?’’ என்றான் இளைஞன்.
‘‘வீட்டுல இருக்கிற அலமாரியிலேதான் எங்கேயோ அந்தச் சாவியை வெச்சேன்’’ என்றாள் பாட்டி.
‘‘தொலைச்ச இடத்துல தேடாம இங்கே ஏன் தேடறீங்க?’’
‘‘வீடு இருட்டா இருக்கு. தெருவிலேதானே வெளிச்சமா இருக்கு. அதான் வெளிச்சத்துல தேடறேன்’’ என்றாள் அந்தக் கிழவி!
செய்ய வேண்டியதைச் செய்யாமல், தொடர்பில்லாத வேறு முயற்சிகளைச் செய்துவிட்டு, ‘எனக்கு 100/100 கிடைக்காது’ என்று சொல்வதும் இதைப் போன்றதுதான்.
வாருங்கள், சரியான இடத்தில் தேடுவோம். நிச்சயம் கிடைக்கும் 100/100 பெறுவதற்கான வெற்றிச் சாவி.
அதற்கு உதவுவதுதான் இந்தக் கையேடு. இதில் பரிட்சையை எதிர்கொள்ளத் தேவையான குறிப்புகள் உள்ளன. பொறுமையாகப் படியுங்கள்.., ஒரு ‘பிளானர்’ கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை உபயோகப்படுத்துங்கள். கடைசிப் பக்கத்தில், இருக்கும் மாதப் படிப்புத் திட்ட பிளானரும் உங்களுக்கு உதவும். ஒரு குட்டி அறிவிப்பும் தரப்பட்டுள்ளது. அதை வெட்டி எடுத்து நீங்கள் படிக்கும் இடத்துக்கு அருகில் ஒட்டி வையுங்கள். ஓரளவு தொந்தரவைத் தவிர்க்கலாம்!
பரிட்சை என்பது பூதமல்ல, நமக்கு சவால் விடும் விளையாட்டுத் தோழன். அந்தப் பரிட்சையோடு சரியான முறையில் விளையாடி, 100/100 பெற்று ஜெயிக்க வாழ்த்துக்கள்!
1. மூளையைத் தீட்டுங்கள், திட்டமும் தீட்டுங்கள்
கச்சிதமாகத் திட்டமிடுவது பாதி வெற்றி பெற்றதற்குச் சமம்.
என்றென்று எவ்வளவு பாடம் படிக்க வேண்டும் என்பதை நன்கு திட்டமிட வேண்டும். மாலையில் ஐந்து மணி நேரம் படிப்பதாக இருந்தால் ஒவ்வொரு மணிநேரமும் எவ்வளவு படிப்பதாக இருக்கிறீர்கள்,
எதைப் படிக்கப்போகிறீர்கள் என்பதைக்கூடத் திட்டமிடலாம்.
திட்டமிடுவது என்பது மிகவும் முக்கியமான கட்டம். அளவுக்கு மீறிய திணிப்பும் அதில் இருக்கக்கூடாது (ஒரு மணி நேரத்தில் மூன்று பாடங்கள் படித்து முடித்தே ஆக வேண்டும் என்பதுபோல). இதற்கு ஒரு முக்கிய ஆலோசனை, ‘முன்னதாகவே திட்டமிடுங்கள்’ என்பதுதான். அதாவது தேர்வுக்கு மிக நெருக்கத்தில் திட்டமிடாமல் அதிக நாட்கள் இருக்கும்போதே திட்டம் தீட்ட வேண்டும்.
2. சவால் விடுங்கள்
திட்டமிடத் தொடங்கும் முன்பாகவே நீங்கள் உயர்வாகக் கருதும் ஒரு சிலரிடம் வெளிப்படையாகவே சவால் விடுங்கள்... ‘இந்தத் தடவை பரிட்சையிலே 100/100 வாங்கியே தீருவேன்’ என்று! மற்ற ஊக்க சக்திகளோடு ‘‘சவால் விட்டுவிட்டோமே, அதை நிறைவேற்றியே ஆகவேண்டும்’’ என்கிற எண்ணமும் சேர்ந்து நம் லட்சியத்தை வேகப்படுத்தும்.
3. ஆசையுடன் படியுங்கள்.
கடும் வெயிலில் ஒரு சின்ன பையைத் தூக்கிக்கொண்டு நடந்து கொண்டிருந்தார் ஒருவர். அந்தப் பை அவருக்கு மிகவும் கனமாக இருந்தது.
அவருக்கு பக்கத்தில் ஒரு பத்து வயது சிறுமி நடந்து வந்துகொண்டிருந்தாள். நான்கு வயது சிறுவனை இடுப்பில் சுமந்துகொண்டிருந்தாள். அந்த சிறுவன் ஆரோக்கியமாகவே காட்சியளித்தான்.
பையைத் தூக்கி வந்தவருக்கு ஆச்சரியம்.அந்தச் சிறுமியிடம் கேட்டார்: ‘‘ஏனம்மா, இந்தப் பையனைத் தூக்கிக்கொண்டு வருவது உனக்குக் கஷ்டமாக இல்லையா?’’
இப்போது அந்த சிறுமியின் முகத்தில் வியப்பு. ‘‘அதெப்படி கஷ்டமாக இருக்கும்? இவன் என் தம்பி’’ என்றபடி அந்தக் குழந்தைக்கு ஒரு முத்தம் கொடுத்தாள்.
அறிவியலின்படி பை அதிகமாக கனக்கும் என்றோ, தம்பி போன்ற நெருங்கிய உறவினர்கள் குறைவாக கனப்பார்கள் என்றோ கிடையாது. ஆனால், அந்த எடையை நாம் உணர்வது மனதையும் பொறுத்த விஷயம்.
இன்னும் பத்து நிமிடங்களில் வீடு இடிந்து விழப்போகிறது... அதற்குள் முடிந்தவரை உங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறலாம் என்றால் நிறைய கனமான பொருட்களையும் வெகுவேகமாக எடுத்துக்கொண்டு வெளியேறுவீர்கள். காரணம், அந்தப் பொருட்கள் மீது உங்களுக்குள்ள பற்று.
இதெல்லாம் இப்போது எதற்கு என்கிறீர்களா? பாடங்களை நீங்கள் விரும்பிப் படிக்கவேண்டும் என்பதற்காகத்தான். அப்போதுதான் அவை மனதில் பதியும் என்பதோடு அதை ஒரு சிரமமாகவும் நினைக்கமாட்டீர்கள்.
இனி உங்களைப் பொறுத்தவரை ‘இது எனக்கு எப்போதுமே பிடித்த சப்ஜெக்ட்’, ‘இது எனக்கு இனி பிடிக்கபோகும் சப்ஜெக்ட்’ ஆகிய இரண்டே பிரிவுகள்தான்.
4. மேலே இருக்கட்டும் பார்வை.
ஒரு வகுப்பில் ‘‘ஓர் ஏழைக் குடும்பத்தின் நிலையைப் பற்றி ஆளுக்கு ஒரு பத்தி எழுதுங்கள்’’ என்றார் ஆசிரியர்.
லட்சாதிபதியின் மகன் ஒருவன் மிகவும் யோசித்து இப்படி எழுதினான்... ‘பாவம், சிவராமனின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. அவர்கள் வீட்டில் ஒரே ஒரு காஸ் சிலிண்டர்தான் இருந்தது. அவர்கள் வீட்டில் உள்ள நான்கு அறைகளில் ஒன்றுக்கு ஏ.ஸி. வசதி இல்லை. அவர்கள் வீட்டு ஃப்ரிஜ்கூட ஒரு மாதமாக வேலை செய்யவில்லை. அதைச் சரி செய்யக்கூட அவர்களிடம் காசு இல்லை. அவர்கள் வீட்டு காருக்கு பெட்ரோல் போட்டுக்கொள்ளக்கூடப் போதிய பணம் இல்லை...’ என்ன செய்ய... அந்தச் சிறுவனுக்கு இதுதான் ரொம்பவும் ஏழ்மை என்று மனதில் பட்டிருக்கிறது.
உங்கள் பெற்றோர் எப்போதாவது இப்படிச் சொல்லியிருப்பார்கள்... ‘‘இல்லாததையே நினைச்சி வருத்தப்படாதே. நமக்கிருக்கிற வசதிகூட நிறையப் பேருக்கு இல்லை. அதை நினைத்துத் திருப்திப்படு.’’ மற்ற விஷயங்களில் இது சரியாக இருக்கலாம். ஆனால், மதிப்பெண்கள் பெறும் விஷயத்தில் இப்படி இருக்கக்கூடாது.
‘நம்மைவிட வகுப்பில் பதினைந்து பேர் கம்மி மார்க்தானே வாங்கியிருக்கிறார்கள்...’ என்று ‘போதும் என்ற மனம்’ இருக்கக்கூடாது. ஓட்டப்பந்தயத்தில் எப்படி நமக்கு முன்னால் செல்பவர்களை ஓவர்டேக் செய்ய வேண்டும் என்று உத்வேகம் இருக்க வேண்டுமோ அதேபோன்றுதான் மதிப்பெண் வாங்குவதிலும் இருக்கவேண்டும். ‘‘எதனால் அவர்கள் மட்டும் அதிக மதிப்பெண்கள் பெறுகிறார்கள்? நம்மாலும் ஏன் அப்படிப் பெறமுடியாது?’’ என்று முன்னால் இருப்பவர்களுடன் போட்டியிட்டு முன்னேறுவதுதான் உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
5. குடையை எடுங்கள், மழையைத் தடுங்கள்!
தேர்வு நெருங்க நெருங்க ஆளாளுக்கு ‘அட்வைஸ் மழை’ பொழியத் தொடங்கி விடுவார்கள். யார் சொல்வதைக் கேட்க வேண்டும் என்பதில் தெளிவு தேவை. ‘‘கடைசி ரெண்டு பாடத்தையும் படிக்கவே வேண்டாம். வேஸ்ட்’’ என்று போகிற போக்கில் யாராவது சொல்வதையெல்லாம் நம்பினால் உங்கள் நூற்றுக்கு நூறு கனவு நனவாகாது.
______________________________________________
அன்பு மாணவச் செல்வங்களே.. இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் தேர்வில் நிச்சயம் பெரும் முன்னேற்றம் காண்பீர்கள்.. வாழ்த்துகள்..!வாழ்த்துகள்..
வாழ்த்துகள்..வாழ்த்துகள்..!.
கிருஷ்ணன்- Admin
- பதிவுகள் : 284
சேர்ந்தது : 16/04/2010
வசிப்பிடம் : KRISHNAGIRI_TN
நான் இருக்கும் நிலை (My Mood) :
Re: மாணவர்களே.. முதல் மதிப்பெண் பெறுவது எளிது.. வெற்றிச்சாவி!
ரொம்ப பயனுள்ள தகவல், நன்றி வலை நடத்துனரே
tamilparks- பதிவுகள் : 87
சேர்ந்தது : 07/09/2010
Similar topics
» இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் 'எபிக்' அறிமுகம்
» மல்லிகா ஷெராவத்-தின் நிர்வாண படம் : பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை சர்ச்சை.
» பி.எஸ்.எல்.வி. (PSLV)ராக்கெட் அனுப்பிய செயற்கைகோளில் இருந்து முதல் படம் பூமிக்கு வந்தது
» மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை -முதல் பாகம் 1. பிறப்பும் தாய் தந்தையரும்
» போதை சாக்லேட் சப்ளை; இளைஞர் முதல் கிழவர் வரை சுவைத்து தின்று போதையில் திளைத்த அவலம் !
» மல்லிகா ஷெராவத்-தின் நிர்வாண படம் : பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை சர்ச்சை.
» பி.எஸ்.எல்.வி. (PSLV)ராக்கெட் அனுப்பிய செயற்கைகோளில் இருந்து முதல் படம் பூமிக்கு வந்தது
» மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை -முதல் பாகம் 1. பிறப்பும் தாய் தந்தையரும்
» போதை சாக்லேட் சப்ளை; இளைஞர் முதல் கிழவர் வரை சுவைத்து தின்று போதையில் திளைத்த அவலம் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|